Monday, 13th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நளினி சுரேஷ்பாபு துவக்கி வைத்தார்

அக்டோபர் 06, 2023 08:45

திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட 15 வது வார்டு பகுதியில் உள்ள நாகர்பள்ளம் மற்றும் மாரியம்மன் கோவில் தெருவில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

விழிப்புணர்வு நிகழ்ச்சியை நகர மன்றத் தலைவர் நளினி சுரேஷ்பாபு துவக்கி வைத்து,  வீடு வீடாக சென்று மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் டெங்கு குறித்து விழிப்புணர்வு ஆலோசனைகளை வழங்கினார்.

 தொடர்ந்து அப்பகுதியில் புகைமருந்து அபேட் மருந்து ஆகியவை அடிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நகர் மன்ற உறுப்பினர், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்